தவளை கத்தினால் மழை.
தவளை கத்தினால் மழை. 🌝 அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம். 🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை. 🌝 எறும்பு ஏறில் பெரும் புயல். 🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 🌝 தை மழை நெய் மழை. 🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு. 🌝 புற்று கண்டு கிணறு வெட்டு. 🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய். 🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு. 🌝 களர் கெட பிரண்டையைப் புதை. 🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. 🌝 நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடை நிலம் எருக்கு. 🌝 நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். 🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும். 🌝 மழையடி புஞ்சை மதகடி நஞ்சை. 🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. 🌝 உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ. 🌝 அகல உழவதை விட ஆழ உழுவது மேல் . 🌝 புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு. 🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. 🌝 ஆடு பயிர் காட்டு...